விஷ்ணு புராணம்

இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும். புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர். 18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார். 18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6 ,ரஜோ புராணங்கள்6, தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம். புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது . நாம் படைக்கப்பட்டது ஏன் ? எதற்கு படைக்கபட்டோம் ? உலகம் படைக்கப்பட்டது ஏன் ? நாம் யார்? ஏன் பிறந்தோம் ? நாம் அனைவரும் யார்? உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ? நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ? காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *