ஆடி வருவாய் குகனே ஷண்முகனே!
ஆடி வருவாய் குகனே ஷண்முகனே
ஓடி வருவாய் மயில் ஏறிவருவாய் (ஆடி)
பாடி வரும் பக்தர் துன்பங்கள் தீர்த்திடு
நாடி வந்து அன்பர்களை அணைத்து மகிழ்வாய் (ஆடி)
பாடிப்பாடி அகமகிழ்ந்தேன் ஆறுமுகனே
தேடித்தேடிக் காத்திருந்தேன் கார்த்திகேயனே
கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே
கூடிக்கூடிப் பக்தர் போற்றும் சுப்ரமண்யனே (ஆடி)
ஆடி வருவாய் குகனே ஷண்முகனே
ஓடி வருவாய் மயில் ஏறிவருவாய் (ஆடி)