கந்தனைக் கண்டீர்களா

கந்தனைக் கண்டீர்களா
கன்னித் தமிழ்ப் பெண்டீர்களா (கந்தனைக் கண்டீர்களா

அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்……………….. (கந்தனைக் கண்டீர்களா

கையிலே வேலிருக்கும்
கண்ணிலே ஒளியிருக்கும்
நெற்றியிலே நீறிருக்கும்
மத்தியிலே பொட்டிருக்கும்
செம்பவழ இதழ் இருக்கும்
திங்களைப் போல் முகம் இருக்கும்
எந்தன்……………….. (கந்தனைக் கண்டீர்களா

தோளிலே அழகிருக்கும்
வேதத்தில் கொலுவிருக்கும்
காலிலே கொலுசிருக்கும்
தாளமாய் அது ஒலிக்கும்
மழலை மொழி இருக்கும்
தமிழே கலந்திருக்கும்
எந்தன்……………….. (கந்தனைக் கண்டீர்களா

கால் கோடு பட்ட இடம்
கமகமன்னு மணக்கும்
மயிலேறிப் போகையிலே
மங்கல மணி ஒலிக்கும்
அவன் பெயர் சொன்னதுமே
அமுதமாய் இதழ் இனிக்கும்

எந்தன்……………….. (கந்தனைக் கண்டீர்களா
அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்……………….. (கந்தனைக் கண்டீர்களா

பாடியவர் : தெரியவில்லை
பாடல் : தெரியவில்லை
இசை தெரியவில்லை

கேட்பதற்கு மிகவும் இனிமையான இந்தப் பாடல் பற்றித் தகவல் கொடுத்தால் மிக்க நன்றி. அப்படிக் கொடுப்பவருக்கு இன்னொரு இனிய பாடல் அனுப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *