தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி

தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி
அதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்
தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்
அருள் வடிவாகி ஆறுதல் தருமே
ஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

கார்த்திகை ஒளியும் காவடி அழகும்
பார்த்திடும் வேளையில் பலன் வந்து சேரும்
கருணையின் வடிவே நான் காணும் துணையே
அடியவர் தினம் தினம் வணங்கிடும் சந்நிதி
சுகம் தரும் உன் சந்நிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *